Saturday, 26 October 2013

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியை ஜனாதிபதி திறந்து வைத்தார்



இலங்கையின் இரண்டாவது அதிவேக வீதியான கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று முற்பகல் திறந்து வைத்தார்.
அதிவேக வீதியை திறந்து வைக்கும் வகையில் ஜனாதிபதி நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்துவைத்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
பினனர் ஜனாதிபதி புதிய அதிவேக வீதியில் காரை செலுத்தி வாகன போக்குவரத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.