Sunday, 20 October 2013

மாத்தளையில் இரு பள்ளிவாசல்கள் திருடர்களால் உடைப்பு





மாத்தளைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இரு பள்ளிவாசல்கள் திருடர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பணம் திருடும் நோக்குடனேயே பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் பணம் இருக்காமையினால் திருடர்களின் கைவரிசை பலனற்று போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாருகொனை மஸ்ஜிதுல் நூர், ரைத்தலாவலை மஸ்ஜிதுல் ஸலாம் ஆகிய இரு பள்ளிவாசல்களே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன. மாத்தளை பெலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரியவருகிறது.
.