மேலும்
அவர் கருத்துத் தெரிவிக்கும் போது நேற்று 12 மணியளவில் அரசாங்கத்தின்
கூலிப்படையாகச் செயற்படும் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார
தேரரும் இன்னும் சில பிக்குகளும் சிறிகொதவிற்குள் நுழைய முற்பட்ட போது
அங்கிருந்தவர்கள் அவர்களைத் தடுத்தனர்.அங்கிருந்த ஏனைய பிக்குகளும் இவர்களை
வெளியேறுமாறு கேட்டனர்.அவர்கள் அதனைப் பொருட்படுத்தாது அத்துமீறி நுழையவே
முற்பட்டனர்.பின்னர் நினைத்ததைவிட எதிர்ப்புப் பலமானது.ஞானசார தேரருக்கு
பலமான ஏச்சுகள் விழுந்தன.
தேவையற்ற விடயங்களில் மூக்கை நுழைக்கும் பொதுபல சேனா நேற்று நல்ல பாடத்தைக் கற்றுக் கொண்டது எனக் கூறினார்.
இது அரசாங்கத்தின் வேலையாகும் என ஐ.தே.கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கருத்துத் தெரிவித்துள்ளார்.